Friday, July 14, 2017

பனிலிங்கம்


பனிலிங்கம்
-----------------
இரவும் பகலுமற்ற நீண்ட பொழுதுகள்
சக்கரங்களின் ஓசைகள் மவுனித்த சாலை
காற்று சயனித்திருக்கும் காலம்
அலைகளின்ஆராவாரத்தை அடக்கிய நிலவின் தீட்டு
பனிமலைச் சிகரத்தின் வழி எங்கும்
ஏகே 47 துப்பாக்கி கண்கள் துரத்துகின்றன.
ஹே.. புனிதவதி..
உன் புத்திரன் கொடுத்த கருவைச் சுமந்து பயணிக்கிறேன்.
அவன் சந்நிதானத்தில் பிரசவிப்பேன்
என் புதல்வியை.
ஹே.. லிங்கேஷ்வரா.. சென்னிமல்லிகார்ஜூனா
பனிலிங்கம் உருகி உருகி..
என் சமவெளி எங்கும்.
ஓம் நமசிவாய..

4 comments:

  1. Replies
    1. துப்பாக்கி அரசியல் சுடுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. அருமை இரசித்தேன்

    ReplyDelete
  3. நட்புக்கு நன்றி

    ReplyDelete