Sunday, May 28, 2017

எச்சில் மானம்

884a081807df5445e35e9ba8e8f990cd.jpeg (470×618)

இதை இப்படி செய்திருக்கலாம்..
அதை அப்படி செய்திருக்கலாம்        
எப்படிப்பார்த்தாலும்
செய்ததெல்லாம் தப்பும் தவறுமாகி
வாசலில் குப்பை.
கணக்குகளின் விடைகள் கனவுகளில் வந்து
கண்ணாமூச்சி ஆடுகின்றன.
இனி என்ன பயன்?
நேற்று வாங்கிய முதல் மதிப்பெண்
இன்று காலாவதியாகிவிட்டது.
காலம் சாட்டையை எடுத்து சுழட்டுகிறது.
விழும் ஒவ்வொரு அடியிலும்
மானம் அவமானம் தன்மானம்
சன்னல்களுக்கும் கண்கள் உண்டு.
காதுகள் உண்டு.
யாரோ எட்டிப்பார்க்கிறார்கள்.
கண்ணாடிகள் இடமாறுகின்றன.
பிம்பங்களைத் தாங்கி நிற்கிறேன்.
நீ துப்பிய எச்சில் என்  முகத்தில்
இன்னும் ஈரத்துடன்.


5 comments:

  1. என் முகத்தில் பட்டதையும்
    மனதைச் சுட்டதையும்
    நினைவில் கொண்டு வரும்
    அற்புதக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்

      Delete
  2. மனம் ஒரு குரங்கு அமைதி பெறுவதற்கு ஞானம் வேண்டும் அருமை.

    ReplyDelete