Friday, March 24, 2017

அரசியல் உளறல்கள்

Image result for அரசியல் கோமாளிகள்



உளறல்கள் பலவிதம்..
அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்
உளறல்கள் எப்போதாவது உண்மையாகிவிட்டால்
 பரவாயில்லை.
சிலர் உளரும் போது என்னவோ அவர்கள்
  சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது
.என்ன மாதிரி ஒரு நிலை வந்திடுச்சிடா சாமி.!

உதாரணத்திற்கு சில உளறல் கில்லாடிகளின் அண்மைய உளறல்கள்

தமிழ்நாட்டில் ஆறு மாதத்திற்குள் திமுக ஆட்சியைப் பிடிக்கும்
என்று உச்சக்குரலில் முழக்கமிடுகிறார் துரைமுருகன்.
 ஜெ வின் மறைவுக்குப் பின் அடிக்கடி கேட்கும்
 இக்குரலும் அதன் பின் நிகழும் சில மெகா காட்சிகளும்
மெரீனா முதல் சட்டசபை வரை ...
இதோடு சேர்த்து புரிந்து கொள்ள வேண்டி  இருக்கிறது.

அதிமுக பிளவுபட்டதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின்
இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக
தொடர்ந்து கூறிவந்தார் தமிழிசை சவுந்தரராஜன்
இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கும்
 பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
 ஆனால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது சரிதான்
என்று இப்போது கூறியுள்ளார்.

சசிகலா முதல்வராவதை எவரும் தடுக்க முடியாது
என்று தன் டுவிட்டரில் எழுதிய சு.சுவாமி
இரண்டு நாட்கள் கழித்து பல்டி அடித்தார்.
சசிகலா முதல்வராக வாய்ப்பே இல்லை
பிப் 9 ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் தெரியவரும்
என்று ஜாதகம் கணித்தார்.

இவர்களின் உளறலுக்குப் பின் நடந்தது என்ன
என்று நமக்குத் தெரியும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
 இவர்கள்  உளறிக் கொட்டுவதையும் கவனிக்க
வேண்டியதாகிவிட்டதே   என்ற கவலையுடன்.


.

1 comment:

  1. அரசியலில் எதுவும் நடக்கும்.... :(

    ReplyDelete