Thursday, June 26, 2014

100 வது பிறந்தநாளில்....






இனிய நண்பர் புதுக்கோட்டை நா. முத்துநிலவன் அவர்கள்
சில கேள்விகளுக்கு தன் வலைப்பூவில் பதில் அளித்திருப்பதுடன்
அதே கேள்விகளை தன் வலைப்பூ நட்பு வட்டத்திற்கும்
விரித்திருக்கிறார். அந்த வலைப்பூ வலையின் நட்பிற்காக
அதே கேள்விகளுடன் நானும் இப்போது...



1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
 கொண்டாட விரும்புகிறீர்கள்?

என் 100 வது பிறந்த நாளன்று என் நினைவாக என் பேரன்மார்
& பேத்தியர் என் கவிதை/ கதை / கட்டுரையை அவர்களுக்குத்
தெரிந்த ஏதாவது ஒரு மொழியில் அப்போதைய சமூக வலைத்தளத்தில்
போட வேண்டும்.
LIKES BEHIND HER LIKES ... என்று முகநூலில் நான்
போட்டு வைத்திருக்கும் லைக்ஸ் குறித்து ஒரு புத்தகம் வெளிவரலாம்.
அந்த ஆண்டின் best seller book வரிசையில் அப்புத்தகம் இருக்கும்.


2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

பாலி மொழி கற்றுக் கொள்ள விருப்பம்.



3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?


கடைசியாக சிரித்தது ... காலம் தான் பதில் சொல்லும்.
இப்போது "தான் பெற்ற இன்பம் பெறுக என் நண்பர்களும்"
என்று இக்கேள்விகளை அனுப்பி எழுத வைத்திருக்கும்
என் நண்பர் புதுக்கோட்டை  நா.முத்துநிலவனின் செயலைக் கண்டு சிரிப்பு வருகிறது.
(கவனிக்க வேண்டியது: நண்பர்களிடம் கோபம் வரும்போதெல்லாம்
சிரிக்க வேண்டும் என்பதை இப்போது பழகிக்கொண்டிருக்கிறேன்!)

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?


மனிதன் செயற்கையாக உருவாக்கிக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு
உண்டு பவர்கட் ப்ராப்ளம். ஆனால் பூமித்தாய்  தன் மரம் செடி
கொடிகளால் இந்தப் பவர்கட் ப்ராப்ளங்களிலிருந்து நம்மைக்\
காத்துக் கொண்டிருக்கிறாள். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்
என்று அடிக்கடி வரும் பவர்கட் ப்ராப்ளங்கள் நமக்குச்
சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

பொதுவாக MY CHILDREN DON'T LIKE ADVICE.
என் வாழ்வில் ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கவனித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள். என் பலம் பலகீனங்களிலிருந்து
அவர்கள் நிறைய அறிந்து கொண்டிருக்கிறார்கள், இன்னும்
நிறைய அறியக்கூடும் என்று நம்புகிறேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் 
எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

உலகப்பிரச்சனையைத் தீர்ப்பது இருக்கட்டும், நண்பர்களே!
நம் உள்ளூர்ப் பிரச்சனையாகிவிட்ட நம் மீனவர்களின்
பிரச்சனையை, இந்திய இலங்கை மீனவர் பிரச்சனையை
முதலில் தீர்க்க நினைக்கிறேன்.


7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பிரச்சனையைப் பொறுத்து அட்வைஸ் கேட்கும்
உறவுகள்/ நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறேன்.
(பொதுவாக யாரிடமும் அட்வைஸ் கேட்பதில்லை!)
. .

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

தவறான தகவல் பரப்பியவரைக் கண்டு ரசிக்க ஆரம்பித்து
விடுவேன்!, மறந்தும் அவரிடம் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்
என்று கேட்கவே மாட்டேன்.
.

9.உங்கள் நண்பரின் மனைவி/ தோழியின் கணவர் இறந்தால் 
அவரிடம் என்ன சொல்வீர்கள்?


அந்த தருணத்தில் எதுவும் சொல்ல மாட்டேன். கட்டிப்பிடித்துக்
கொஞ்ச நேரம் அழுவேன். எனக்குத் தெரியும் என் தோழமைக்கு
என் தோள்களில் சாய்ந்து தன் துக்கத்தை இறக்கிவைப்பது  எவ்வளவு
ஆறுதலாக இருக்கும் என்பது.
அதன்பின் சமூக பொருளாதர நிலையில் அடுத்தக் கட்டத்தில்
செய்ய வேண்டிய காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.



10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

புத்தகம் படிப்பேன்.
அப்புறமா
பித்தகம் படிப்பேன்.
திடீர்னு ஒரு மூட் வந்துவிட்டால் என் லிட்டில்ஹீரோ அறைக்குள்
துணிந்து போய்விடுவேன், அவன் அறை என்பது இந்த மாநகரத்தின்
மாநகராட்சி குப்பை லாரி மாதிரி. அதில் கைவைப்பது என்பது
ஒரு த்ரில்லிங்கான சேலஞ்சான விஷயம். இரண்டு மாதத்திற்கு
முன்பு சாப்பிட்ட பீசா பில் முதல் நேற்றைய கணினி சாப்ட்வேர் வரை
எதுவேண்டுமானாலும் கிடைக்கும்.... (pls note that my little hero is 26 years old)




-----------------------------

2 comments:

  1. என் மீது கோவப்படடதற்கு நன்றி.(அன்புள்ளவர்களிடம்தானே கோவப்பட முடியும்? சரி வுடு...)
    அப்புறம்.. எப்பவும் -புகைப்படம் உள்பட- சீரியசாகவே இருக்கும் என் தோழியைக் கொஞ்சம் ஜனரஞ்சகமாகத் திருப்பவே இந்த சீரியஸ் விளையாட்டு. கலந்து கொண்டு இனிய பதில் தந்தமைக்கு எனது நன்றி. நன்றி- இதைத் தொடங்கிவைத்த மதுரைத் தமிழனுக்கும், என்னிடம் தள்ளிவிட்ட தங்கை மைதிலிக்கும்..

    ReplyDelete